Make Money

Home » » பிருத்வி 2 ஏவுகணை சோதனை வெற்றி

பிருத்வி 2 ஏவுகணை சோதனை வெற்றி

Written By Admin on Wednesday, 28 September 2011 | 12:35


தரையில் ஒரு இலக்கிலிருந்து மற்றொரு இலக்கை நோக்கி பாயும் பிருத்வி 2 ரக ஏவுகளை ஒரிசாவின் பாலாசூர் கடற்கரைப் பகுதியில் நேற்று முன்தினம் வெற்றிகரமாகச் சோதனை செய்யப்பட்டது.

உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட பிருத்வி 2 ஏவுகணை 350 கிலோ மீற்றர் தூரம் வரை அணுகுண்டை ஏந்திச் சென்று எதிரியின் இலக்கைத் தாக்க வல்லது ஏற்கனவே இந்த ஏவுகணை பலமுறை வெற்றிகரமாகச் சோதிக்கப்பட்டுள்ளது.

மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்துடன் இந்த ஏவுகணை நேற்று முன்தினம் பாலாசூர் பகுதியில் இருந்து ஏவப்பட்டு இராணுவ அதிகாரிகளால் பரிசோதிக்கப்பட்டது.

ஒன்பது மீற்றர் நீளம் கொண்ட இந்த ஏவுகணை வங்கக் கடலில் நிறுத்தப்பட்டிருந்த இலங்கை துல்லியமாகச் சென்று தாக்கியதாக இராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறைத் தலைவர் சரஸ்வத் தெரிவித்துள்ளார்.
Share this article :

Post a Comment