Make Money

World News

Entertainment

Advertise

Blog Archive

Latest Post

குரங்கு விரட்டியதால் கல்லூரி மாடியிலிருந்து விழுந்து மாணவி பலி

Written By Admin on Saturday, 15 October 2011 | 10:41


காரைக்கால் அடுத்த நிரவி கீழராஜவீதியை சேர்ந்தவர் நைனா மரைக்காயர். சவுதியில் வேலை செய்கிறார். இவரது மகள் மெகபூப்நிஷா(19). அங்குள்ள அவ்வையார் அரசு மகளிர் கல்லூரியில் முதலாமாண்டு ஹோம் சயின்ஸ் படித்து வந்தார். கல்லூரியில் குரங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இவர் நேற்று காலை வழக்கம்போல் கல்லூரிக்கு சென்றார். கல்லூரியின் பழைய கட்டிடத்தில் 2வது மாடியில் உள்ள இவரது வகுப்புக்கு அருகே திடீரென மெகபூப்நிஷாவின் அலறல் சத்தம் கேட்டது. சக மாணவிகள் ஓடி வந்து பார்த்தனர்.

அப்போது அவர், மாடியிலிருந்து கீழே விழுந்து நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந் தார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த மாணவிகள் பதறி துடித்தனர். இது குறித்து கல்லூரிக்கு எதிரே உள்ள மகளிர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் வந்து மாணவியை மீட்டு காரைக்கால் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மெகபூப்நிஷா பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து மாணவிகள் கூறுகையில், ‘‘ கல்லூரி வளாகத்தில் குரங்குகள் அடிக்கடி நிறைய வந்து செல்கிறது. இதனால் பல மாணவிகள் அச்சமடைந்துள்ளனர். மெகபூப்நிஷா வும் குரங்குக்கு பயந்து ஓடுகையில் தவறி கீழே விழுந்து இறந்திருக்கலாம்‘‘ என்றனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

அமைச்சர் முற்றுகை: காரைக்கால் அரசு விழாவுக்கு வந்த புதுச்சேரி சமூக நலத்துறை அமைச்சர் ராஜவேலு, எம்எல்ஏ நாஜிம் ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று மாணவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். கல்லூரிக்கு விசாரணை நடத்த வந்த அமைச்சரை தமுமுக, தவ்கீத் ஜமாஅத், மனிதநேய மக்கள் கட்சியினர்  முற்றுகையிட்டு கல்லூரி வளாகத்தில் நடமாடும் குரங்குகளை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதியளித்ததை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

நவீன கண்புரை அறுவை சிகிச்சை: இத்தாலியில் நேரடி ஒளிபரப்பு

Written By Admin on Saturday, 8 October 2011 | 02:04

 
சென்னை தனியார் கண் மருத்துவமனையில் செய்யப்பட்ட "குளூட் ஐ.ஓ.எல்.,' கண்புரை அறுவை சிகிச்சை, இத்தாலியில் உள்ள ரோமில் நடந்த கண் மருத்துவ மாநாட்டில், நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. 60 வயது முதியவருக்கு, இந்த நவீன அறுவை சிகிச்சையை, டாக்டர் அமர் செய்தார்.
ரோமில், "சிக்கலான சூழலில் கண்புரை அறுவை சிகிச்சை' என்ற தலைப்பில் நடத்த இம்மாநாட்டில், 200க்கும் மேற்பட்ட டாக்டர்கள் பங்கேற்றனர். "வீடியோ கான்பரன்ஸ்' மூலம், சந்தேகங்களுக்கு விளக்கம் பெற்றனர்.

டாக்டர் அமர் கூறியதாவது:கண்ணில் லென்சை தாங்கிப் பிடிக்கும் கேப்ஸ்யூல் சேதப்படும்போது அல்லது போதுமான அளவு அது ஒத்துழைக்காத நிலையில், லென்ஸ், அங்கும் இங்கும் நகரக் கூடும். வயோதிகம், கண்ணில் அடிபடுதல் அல்லது பட்டாசு வெடித்து காயம் ஏற்படுதல் போன்ற நிலைகளில், லென்ஸ் நகரும்.இதுபோன்ற நிலையில், குளூட் இன்ட்ரா ஆக்குலர் லென்ஸ் (ஐ.ஓ.எல்.,) பொருத்தி இக்குறையை நிவர்த்தி செய்யலாம். இத்தொழில்நுட்பத்தின்படி, கண்ணில் 2 முதல் 3 மி.மீ., அளவில் சிறிய துளையிட்டு இன்ட்ரா ஆக்குலர் லென்சை புகுத்தி, தையல் இல்லாமல், ஒருவித உயிரி பசை (பைப்ரின்) பயன்படுத்தி, பொருத்தப்படும்.குளூட் ஐ.ஓ.எல்., தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, மல்டிபோகல் ஐ.ஓ.எல்., அறுவை சிகிச்சையும் செய்யப்படுகிறது. இதனால், சிக்கல் நிறைந்த கண்புரை அறுவை சிகிச்சைக்குப் பின், நோயாளிகளுக்கு மேம்பட்ட பார்வை கிடைக்கும். இத் தொழில்நுட்பம், "ஆன்டீரியர் செக்மென்ட்' கண் மாற்று அறுவை சிகிச்சையிலும் பயன்படுத்தப்படுகிறது.இவ்வாறு டாக்டர் அமர் கூறினார்.

பிடிவாதத்தால் நிறைய இழந்துவிட்டேன் : நயன்தாரா வேதனை!!


I loses lot says nayanthara
 என் பிடிவாதத்தால் பல விஷயங்களை இழந்திருக்கிறேன்; இருந்தாலும் பிடிவாத குணத்தை என்னால் மாற்ற முடியவில்லை என்று நடிகை நயன்தாரா வேதனை தெரிவித்துள்ளார். சிம்புவுடன் காதல் முறிவைத் தொடர்ந்து, நடிகர் பிரபுதேவாவுடன் காதல் வயப்பட்டிருக்கும் நடிகை நயன்தாரா, விரைவில் பிரபுதேவாவை திருமணம் செய்யவுள்ளார். இந்த திருமணத்துக்கு இடையூறாக இருந்த காதல் மனைவி ரமலத்தை, நடிகர் பிரபுதேவா சமீபத்தில் விவாகரத்து செய்தார். திருமண கனவுகளுடன் சமீபத்தில் கேரள பத்திரிகை ஒன்றிற்கு மனம்திறந்த பேட்டியளித்துள்ளார் நயன்தாரா. அதில் தன்னுடைய பிடிவாத குணம் பற்றி கூறி வேதனைப்பட்டிருக்கிறார்.

நயன்தாரா பேட்டியில், "பிடிவாதம்தான் என் கெட்ட குணம். ஒரு முடிவு எடுத்து விட்டால், எந்த இழப்பு வந்தாலும் அதை செய்து பார்க்க ஆரம்பித்து விடுவேன். இந்த குணத்தால் பல விஷயங்களை இழந்திருக்கிறேன். இருந்தாலும் என்னால் மாற முடியவில்லை; என்னை மாற்றிக் கொள்ளவும் முடியவில்லை, என்று வேதனையுடன் தனது நெகட்டிவ் பக்கங்களை கூறியிருக்கிறார்.

சவால் விட்ட சல்மான்! பூச்சியை சாப்பிட்ட அசின்!!


Salman challanged asin to eat a bug
பூச்சியை சாப்பிட சொல்லி அசினிடம், சவால்விட்ட சல்மான் கான் அதில் தோற்றுவிட்டாராம். நடிகர் சல்மான் கானும், அசினும் சேர்ந்து "ரெடி" படத்தில் நடித்தனர். அந்த படப்பிடிப்பின்போது சல்மான், அசினிடம் சவால்விட்டதாகவும், அதில் அவர் தோற்று விட்டதாகவும் இப்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த சுவாரஸ்யமான சவால் பற்றி அசின் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.

அசின் தனது பேட்டியில், "ரெடி" படப்பிடிப்பின் போது, சல்மான், பாங்காக் வனப்பகுதியில் இருந்து பிடித்து வந்த பூச்சியை வைத்திருந்தார். திடீர் என்று இந்த பூச்சியை நீங்கள் சாப்பிடுங்கள் பார்ப்போம் என்று சவால்விட்டார். பொதுவாக பெண்கள் பூச்சிகளைப் பார்த்தாலே ஓடுவார்கள். அதனால் தான் அவர் தைரியமாக சவால் விட்டார். ஆனால் நானோ சிறிதும் பயப்படாமல் அந்தப் பூச்சியை சாப்பிட்டேன். அதைப் பார்த்து அவர் அசந்துவிட்டார். நீங்கள் பூச்சியைப் பார்த்து கத்தி, கூச்சல் போடுவீர்கள் என நினைத்தேன் என்று கூறி ஆச்சர்யப்பட்டார், என கூறியுள்ளார்.

பைனலுக்கு முன்னேறியது பெங்களூரு அணி: கெய்ல், கோஹ்லி அபாரம்

நியூ சவுத் வேல்ஸ் அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் கெய்ல், கோஹ்லி அபார ஆட்டத்தை வெளிப்படுத்த, பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேறியது.

மூன்றாவது சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடக்கிறது. நேற்று பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடந்த முதலாவது அரையிறுதியில், பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ், நியூ சவுத் வேல்ஸ் (ஆஸ்திரேலியா) அணிகள் மோதின. "டாஸ்' வென்ற பெங்களூரு அணி கேப்டன் வெட்டோரி, "பீல்டிங்' தேர்வு செய்தார்.

கைப் வாய்ப்பு:

பெங்களூரு அணியில் ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டது. காயம் காரணமாக சுழற்பந்துவீச்சாளர் சையது முகமது நீக்கப்பட்டு, முகமது கைப் சேர்க்கப்பட்டார். நியூ சவுத் வேல்ஸ் அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.

ஸ்மித் அபாரம்:

முதலில் பேட்டிங் செய்த நியூ சவுத் வேல்ஸ் அணிக்கு ஷேன் வாட்சன் (3) ஏமாற்றினார். பின் இணைந்த டேவிட் வார்னர், டேனியல் ஸ்மித் ஜோடி அதிரடியாக ரன் சேர்த்தது. பெங்களூரு பந்துவீச்சை பதம்பார்த்த வார்னர், "சிக்சர்' மழை பொழிந்தார். அபாரமாக ஆடிய வார்னர், 40வது பந்தில் அரைசதம் அடித்தார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த டேனியல் ஸ்மித், பட்கல் வீசிய ஆட்டத்தின் 14வது ஓவரில், ஒரு இமாலய "சிக்சர்' அடித்து தனது அரைசதத்தை பூர்த்தி செய்தார். இரண்டாவது விக்கெட்டுக்கு 146 ரன்கள் சேர்த்த போது டேனியல் ஸ்மித் (62 ரன்கள், 42 பந்து, 3 சிக்சர், 7 பவுண்டரி), அரவிந்த் வேகத்தில் "போல்டானார்'.

வார்னர் சதம்:

தொடர்ந்து அதிரடி காட்டிய வார்னர், 62வது பந்தில் சதம் அடித்தார். அரவிந்த் வீசிய ஆட்டத்தின் கடைசி ஓவரில் இரண்டு "சிக்சர்', இரண்டு "பவுண்டரி' உட்பட 23 ரன்கள் எடுத்த வார்னர், அணியின் ஸ்கோரை வலுவாக்கினார். நியூ சவுத் வேல்ஸ் அணி, 20 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 203 ரன்கள் குவித்தது. அபாரமாக ஆடிய வார்னர், 68 பந்தில் 11 "சிக்சர்', 6 "பவுண்டரி' உட்பட 123 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். பெங்களூரு சார்பில் தில்ஷன், அரவிந்த் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

கெய்ல் அதிரடி:

சவாலான இலக்கை விரட்டிய பெங்களூரு அணிக்கு தில்ஷன் (4) ஏமாற்றினார். பின் இணைந்த கிறிஸ் கெய்ல், விராத் கோஹ்லி ஜோடி ஆட்டத்தை கையில் எடுத்துக் கொண்டது. நியூ சவுத் வேல்ஸ் பந்துவீச்சை வெளுத்துவாங்கிய கெய்ல், 20 பந்தில் அரைசதத்தை பதிவு செய்தார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த கோஹ்லி, தன்பங்கிற்கு அரைசதம் அடித்தார். கம்மின்ஸ் வீசிய ஆட்டத்தின் 14வது ஓவரில் ஒரு இமாலய "சிக்சர்' அடித்து பந்தை மைதானத்திற்கு வெளியே பறக்கவிட்ட கெய்ல் (92 ரன்கள், 41 பந்து, 8 சிக்சர், 8 பவுண்டரி) அதே ஓவரில் அவுட்டானார்.

கோஹ்லி நம்பிக்கை:

அடுத்து வந்த சவுரப் திவாரி (0), மயங்க் அகர்வால் (7) சோபிக்கவில்லை. தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய கோஹ்லி, அணியின் ஸ்கோரை உயர்த்தினார். ஸ்டீவன் ஸ்மித் வீசிய ஆட்டத்தின் 19வது ஓவரில், தொடர்ந்து இரண்டு பவுண்டரி அடித்த கைப் (13*), அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். பெங்களூரு அணி 18.3 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 204 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கோஹ்லி (84 ரன்கள், 49 பந்து, 3 சிக்சர், 10 பவுண்டரி) அவுட்டாகாமல் இருந்தார். இதன்மூலம் பெங்களூரு அணி, முதன்முறையாக சாம்பியன்ஸ் லீக் தொடரின் பைனலுக்கு முன்னேறியது. ஆட்ட நாயகன் விருதை பெங்களூரு அணியின் கோஹ்லி பெற்றார்.

வார்னர் சாதனை

பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான அரையிறுதியில் 68 பந்தில் 123 எடுத்து அவுட்டாகாமல் இருந்த, நியூ சவுத் வேல்ஸ் அணியின் டேவிட் வார்னர், தொடர்ந்து இரண்டாவது சதம் அடித்தார். முன்னதாக இவர், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் 69 பந்தில் 135 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். இதன்மூலம் "டுவென்டி-20' அரங்கில் அடுத்தடுத்து இரண்டு சதம் அடித்த முதல் வீரர் என்ற புதிய சாதனை படைத்தார்.

200வது "சிக்சர்'

மூன்றாவது சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' தொடரின் 200வது சிக்சரை, பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணியின் கிறிஸ் கெய்ல் அடித்தார். நேற்று நடந்த நியூ சவுத் வேல்ஸ் அணிக்கு எதிரான அரையிறுதியில், ஸ்டூவர்ட் கிளார்க் வீசிய ஆட்டத்தின் நான்காவது ஓவரின் 4வது பந்தில் ஒரு இமாலய "சிக்சர்' அடித்த கெய்ல், தொடரின் 200வது சிக்சரை பதிவு செய்தார்.
* தொடரின் முதல் சிக்சரை அடித்த பெருமை கிறிஸ் கெய்ல்லை சேரும். இதனை வாரியர்ஸ் அணிக்கு எதிராக அடித்தார். தொடரின் 100வது சிக்சரை மும்பை இந்தியன்ஸ் வீரர் போலார்டு, கேப் கோப்ராஸ் அணிக்கு எதிராக அடித்தார்.

மூன்று பெண்களுக்கு உலக அமைதிக்கான நோபல்

அமைதிக்கான நோபல் பரிசு, இந்தாண்டு மூன்று பெண்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. இவர்களில் இருவர் ஆப்ரிக்காவின் மேற்குப் பகுதியில் உள்ள, லைபீரியா நாட்டவர். ஒருவர் ஏமன் நாட்டவர். நார்வே தலைநகர் ஆஸ்லோவில், இந்தாண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு, நேற்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, ஆப்ரிக்க கண்டத்தின் மேற்குப் பகுதியில், அமைந்துள்ள லைபீரிய நாட்டின் அதிபர் எல்லன் ஜான்சன் சர்லீப், அந்நாட்டின் அமைதிப் போராளி லேமா போவீ மற்றும் ஏமன் நாட்டைச் சேர்ந்த தவாக்குல் கர்மான் ஆகிய மூன்று பேருக்கு, இப்பரிசு பகிர்ந்தளிக்கப்படுகிறது. இவர்களில் லைபீரிய நாட்டவரான லேமா போவீ, அந்நாட்டில் நடந்து வந்த, இரண்டாம் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதில் பெரும் பங்காற்றினார். அவரது அமைதி இயக்கம், உள்நாட்டுப் போரை 2003ல் முடிவுக்குக் கொண்டு வந்தது. அதன் பலனாக, அந்நாட்டில் பொதுத் தேர்தல் நடத்தப்பட்டு, அதிபராக எல்லன் ஜான்சன் சர்லீப், 72, என்ற பெண் தேர்ந்தெடுக்கப்பட்டார். லைபீரியாவிலும், ஆப்ரிக்காவிலும் முதன் முறையாக அதிபரான பெருமை சர்லீப்புக்குக் கிடைத்தது.

ஏமன் நாட்டில், தற்போது நடந்து வரும் அதிபருக்கு எதிரான ஜனநாயகப் போராட்டங்களின் ஒருங்கிணைப்பாளராக பணியாற்றி வருகிறார் தவாக்குல் கர்மான், 32. பத்திரிகையாளரான இவர், "உமன் ஜர்னலிஸ்ட்ஸ் வித்தவுட் செயின்ஸ்' என்ற மனித உரிமை அமைப்பை நடத்தி வருகிறார். இவரது தந்தை, சலேயின் ஆட்சியில், சட்ட அமைச்சராக இருந்தவர்.

நள்ளிரவில் நிர்வாணமாக ஓடிய பெண்-’பேய்’ என மக்கள் பீதி!

Written By Admin on Friday, 7 October 2011 | 10:18


சென்னை பல்லாவரம் மார்க்கெட் பகுதியில் நள்ளிரவில் இளம்பெண் ஒருவர் பொட்டுத் துணி கூட இல்லாமல் திடீரென நிர்வாணமாக ஓடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பேய் என்று கூறி மக்கள் பீதியடைந்தனர்.
நேற்று பல்லாவரம் மார்க்கெட் பகுதியில் ஒரு இளம் பெண் உடைகளின்றி, தலைவிரி கோலமாக ஓடி வந்து கொண்டிருந்தார். இதைப் பார்த்து அந்தப் பகுதியில் அப்போது ரோந்து வந்து கொண்டிருந்த இன்ஸ்பெக்டர் கோவிந்த் உடனடியாக மகளிர் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தார்.
மகளிர் போலீஸார் போலீஸ் ஜீப்பில் விரைந்து வந்து அந்தப் பெண்ணைப் பிடித்து ஆடைகளை அணிவித்து பல்லாவரம் காவல் நிலையத்திற்குக் கூட்டிச் சென்றனர்.
அவரிடம் விசாரணை நடத்தியபோது அவர் கூறுகையில், எனது சொந்த ஊர் திருவண்ணாமலை மாவட்டம், தென்கல்பாக்கம் கிராமம் ஆகும். கடந்த 6 வருடமாக அதே பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரும், நானும் தீவிரமாக காதலித்து வந்தோம்.
10 மாதத்திற்கு முன்பு என்னை ஏமாற்றி விட்டு வேறொரு பெண்ணை ராமச்சந்திரன் திருமணம் செய்து கொண்டார். எனவே செய்யாறு போலீசில் இதுபற்றி அப்போது புகார் செய்தேன். ஆனால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் நான் பெரும் மன உளைச்சலில் இருந்து வந்தேன். இதனால் எனது பெற்றோர் மன மாற்றத்துக்காக பல்லாவரம் அடுத்த பொழிச்சலூரில் உள்ள எனது மூத்த சகோதரி வீட்டிற்கு என்னை அனுப்பி வைத்தனர்.
ராமச்சந்திரன் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க என்ன செய்யலாம் என்று யோசித்தேன். வித்தியாசமாக எதையாவது செய்தால் போலீசார் கைது செய்து நம்மை விசாரிப்பார்கள். அப்போது நடந்ததை கூறி ராமச்சந்திரன் மீது நடவடிக்கை எடுக்க செய்யலாம் என்று நினைத்தேன். இதற்காக நள்ளிரவு நிர்வாணமாக பொழிச்சலூரில் இருந்து பல்லாவரம் வரை நடந்து வந்தேன் என்றார் அவர்.
இதற்கிடையே, இந்தப் பெண் வந்த வழியெல்லாம் அவரைப் பார்த்த பொதுமக்கள் பேய் என நினைத்து ஓடி ஒளிந்ததும் தெரிய வந்துள்ளது.
அந்தப் பெண் சொல்வது உண்மையா அல்லது மன நோயால் பாதிக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Health